Friday, October 19, 2012



செயல் ஒன்றே ஆனால் பலன்??


கணவன் :- வேலைக்காரிக்கு  எதுக்கு உன் சேலையை கொடுத்த
மனைவி :- ஏன் என்னாச்சு
கணவன் :- நீன்னு நினைச்சி
மனைவி :- நினைச்சி!!!!!!!!
கணவன்:- அப்படியே கட்டிபிடிச்சி முத்தம் கொடுத்துட்டேன்
(மனைவியின் மைண்ட் வாய்ஸ் : வயசான வேலைக்காரியை பார்த்து வைச்சிட வேண்டியதுதான் அப்புறம் பாப்போம் காமெடியை ஹீ..ஹீ)

மனைவி :- வேலைக்காரனுக்கு எதுக்கு உங்க ஷர்ட் கொடுத்தீங்க
கணவன் :- ஏன் என்னாச்சு
மனைவி :- நீங்கணு நினைச்சு
கணவன் :- நினைச்சு !!!!!!!!
மனைவி :- பூரி கட்டையாலயே அடிச்சிட்டேன்
(கணவனின் மைண்ட் வாய்ஸ் : எனது பழைய சட்டையை உங்க அப்பாவிற்குதான் அடுத்த தடவை தரப்போறேன் அப்ப என்ன நடக்குது பாப்போம்டி பாப்போம்)

ஆண்களே  இந்த பலன் மூலம் நாம் தெரிஞ்சு கொண்டது என்னவென்றால் தப்பி தவறி உங்க சட்டையை மட்டும் வேலைக்காரன்  உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமல்ல உங்கள் எதிரிக்கும் கொடுத்து விடாதீர்கள்

பெண்களே உங்கள் சேலையை கொடுத்தால் அழகான வேலைக்காரிக்கு மட்டுமே கொடுக்கவும்



அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

7 comments:

  1. ம்ம்ம் .. நல்ல முயற்சி .. இரசிக்கும் படியாக இருந்தது .

    ReplyDelete
  2. ஆண்கள் மேல உங்களுக்கு இருக்கும் கரிசனத்தை நினைச்சா .....ம்ம்........ ஆனந்தக் கண்ணீர் தான் வருது!!

    ReplyDelete
  3. அழகான பெண்ணுக்கு கையில் கத்தி எல்லாம் கொடுப்பாங்களாம் ஒகே வா ?

    ReplyDelete
  4. I like joker but more like your opinion

    ReplyDelete
  5. I like joke but more like your opinion

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.