Friday, October 12, 2012



ரஜினிகாந்த் போராடப் போறாரா அல்லது வெளிநாட்டுக்கு ஒடப் போகிறாரா?


""தமிழ்நாடு வாணியர் பேரவையினர் சார்பில்  ஓசூர் எல்லையில கண்டன ஆர்ப்பாட்டம்வருகிற 20ம்தேதி நடைபெற போவதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த போராட்டத்தில் தமிழ் நடிகர், நடிகைகள் பட்டாளங்களைக் கூட்டிட்டுப் போய் ஆர்பாட்டம் நடத்த போகிறார்கள். பெங்களுரில் நடந்த போராட்டத்தில் அனைத்து கன்னட நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டனர். அதைப் போல இவர்களும் தமிழக நடிக நடிகைகளை கலந்து கொள்ள வைக்க முயற்சி செய்கிறார்கள்

இப்படிபட்ட போராட்டத்தில் ரஜினிகாந்த கலந்து போராடப் போகிறார அல்லது பயந்து ஒடப் போகிறாரா? என்பதுதான் கேள்வி.


இது என்ன கேள்வி அவருக்கு படத்தில் இருக்கும் தைரியம் நிஜ வாழ்க்கையில் இல்லை என்பது தெரிந்த விஷயம்தானே அதுவும் கூடிய சீக்கிரம் புதுபடம் ரீலீஸாக போகும் நேரத்தில் தைரியத்தை மூட்டை கட்டி பரண் மேல் வைத்து விடுவார் என்று நீங்கள் சொல்ல வருவதும் புரிகிறது...ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


செய்தி நம்பர் 2 : நண்பர் ஜோதிஜி திருப்பூர்  அவர்கள் கூகுல் ப்ளஸில் பகிர்ந்து கொண்டது இது


மந்திராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தரான நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி செல்வது வழக்கம். மேலும் இக்கோயிலின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பலமுறை நன்கொடை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரிகளான மாதவ செட்டி, சுயமிந்தரா சாரி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’’ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த நன்கொடை மூலம் சர்வஜ்ஜ மண்டபம் பின்புற முள்ள பழைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் தங்கும் ஏசி வசதியுடன் கூடிய 25 அறைகள் கட்டப்படும். மேலும் 100 அறைகளும் கட்டப்பட உள்ளது. இதுதவிர கோயில் சுற்றியிலும் பூங்காக்கள் அமைக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.


இதற்கு Pattikaattaan Jey  என்பவர் இட்ட கருத்து

இவரு இந்த கோவிலுக்கே டொனேசன் குடுத்துக்கட்டும். சிவகாசி விபத்து மாதிரி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மம்மூட்டி கொடுத்துப்பார். வாழ்க ரஜினி சார்...ஓங்குக அவரது புகழ்.

நாம் தமிழனாக பிறந்ததால் இந்த பட்டிக்காட்டனோடு சேர்ந்து கூட்டத்தோடு கூட்டமாக  வாழ்க ரஜினி சார்...ஓங்குக அவரது புகழ்.
என்று கூறி  அவரின் அடுத்த படத்திற்கான டிக்கெட்டுக்காக பொண்டாட்டிகளின் தாலியை விற்க ரெடியாகுவோம்


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

30 comments:

  1. பட்டிக்காட்டான் நக்கல் அடிச்சிருக்கின்றார்....!ஹஹா!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அவர் நக்கல் அடித்து இருக்கிறார். ஆனால் நான் கிண்டல் பண்ணியதை உங்கள் நண்பர் பட்டிக்காட்டான் அவரை கிண்டல்பண்னியதாக எடுத்து கொண்டார்

      Delete
  2. நடிப்பு என்பது தொழில் மட்டுமே. நாம் சினிமா பார்க்கப் போகிறோம் என்றால் அது நம்முடைய Entertainment-காகத்தானே தவிர நடிகனை வாழவைக்க அல்ல. தற்போது வரும் படங்களில் 99% ஊத்திக் கொள்கின்றன, அதனால் ஏற்ப்படும் இழப்பை நாமா கொடுக்கிறோம்? இல்லையே!! ரஜினிகாந்த் என்பவர் தனிப்பட்ட மனிதர், அவர் தனது நடிப்புத் திறமையால் பணம் சேர்க்கிறார். அதை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற முடிவை எடுக்க அவருக்கு 100% சுதந்திரம் உண்டு. அடுத்து, ஹோசூரில் நடக்கும் போராட்டத்துக்கு அவர் வருவாரா வரமாட்டாரா என்பதும் அவரது தனி மனிதச் சுதந்திரம் யாரும் கட்டாயப் படுத்த முடியாது. ரஜினியின் உடல்நிலை தற்போது இருக்கும் நிலையில், மிக நெருங்கிய நண்பர் பிரபுவின் மகன், சிவாஜியின் பேரனின் படத்தின் ஆடியோ ரிலீசுக்கே போக முடியாமல், கஷ்டப் பட்டு கடைசி நிமிடத்தில் வந்தார். அந்த நிலையிலும் அவரை போராட்டக் கலத்துகெல்லாம் அழைப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றுகூட நான் சொல்லுவேன். பாவம் அவரை விட்டு விடுங்கள், அவர் விருப்பம் போல வாழ விடுங்கள்.

    இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டும், ஆந்திராவுக்கும் கர்நாடகத்துக்குமிடையே உள்ள நதிநீர்ப் பங்கிட்டு பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு சொன்ன தீர்ப்பை இரண்டு மாநிலங்களுமே மறுப்பு பேசாமல் ஏற்றுக் கொண்ட வேளையில், காவிரிப் பிரச்சினையில் மட்டும் ஏன் இரு மாநிலங்களும் ஒத்துப் போக முடியவில்லை? காரணம் இரண்டு மாநில நடிகர்களும் இந்த மாதிரி கூட்டம் போட்டு குட்டிச் சுவராக்கியதால் தான். தற்போது தமிழகத்து ஒரு சொட்டு நீர் தந்தாலும் அது அரசியல் ரீதியாகத் தோல்வியாகச் சித்தரிக்கப் படும் அது எங்கள் வெற்றி என்று இந்த நடிகர் கூட்டம் கொக்கரிக்கும், அது கர்நாடக ஆளும் கட்சியின் ஒட்டு வங்கியில் பெருத்த அடியாக விழும். ஆகையால் அவர்கள் எந்த கோர்ட்டு தீர்ப்புக்கும் ஒரு போதும் ஒத்துப் போக மாட்டார்கள். நடிகர்கள் களத்தில் இறங்கியதால் நட்டம் தானே தவிர ஒரு பிரயோஜனமும் கிடையாது, அதிலிருந்து ஒதுங்கியிருப்பது நல்லதுதான்.

    ReplyDelete
    Replies
    1. Sariya sonninga Jayadev Das... Rajinikanthodathu mattum than nalla irukkunu avarkittaiye varanunga yallarum...

      Delete
    2. நடிகர்கள் நடிகர்களாக மட்டுமே இருக்கும் வரை அவர்களைப்பற்றி பேச வேண்டியதில்லை ஆனால் அவர்கள் அதை தாண்டி வெளியில் வந்து அரசியல் வாதிகளோடு சேர்ந்து தேர்தல் நேரத்தில் அவர்களின் ரசிகர்க்ளுக்கு வாய்ஸ்கொடுப்பதால் தான் அவர்களை பற்றி விமர்சிக்க வேண்டியிருக்கிறது நண்பரே அதுமட்டுமல்ல அடிக்கடி என்னை வளர்த்துவிட்ட தமிழ் மக்களுக்கு( எனது ரசிகர்களுக்கு) ஏதாவது செய்யவேண்டுமென்று சொல்வதால் இந்த மாதிரி தமிழர்களுக்காக நடக்கும் போராட்டத்திற்கு தமிழர்களின் பக்கம் நியாம் இருப்பதாக நினைத்தால் ஆதரவு தெரிவிக்கலாமமே

      //ரஜினியின் உடல்நிலை தற்போது இருக்கும் நிலையில், மிக நெருங்கிய நண்பர் பிரபுவின் மகன், சிவாஜியின் பேரனின் படத்தின் ஆடியோ ரிலீசுக்கே போக முடியாமல், கஷ்டப் பட்டு கடைசி நிமிடத்தில் வந்தார். அந்த நிலையிலும் அவரை போராட்டக் கலத்துகெல்லாம் அழைப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றுகூட நான் சொல்லுவேன்///

      அவர் உடல் நிலை சரியில்லை என்றால் வர வேண்டாம் ஆனால் போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கையாவது விடலாமே? அல்லது தனது சார்பாக ரசிகர் மன்ற தலைவரை அனுப்பி வைக்கலாமேங்க


      நடிகர்களை அழைப்பதன் காரணம் அவர்களின் பாப்ப்புலாரிட்டிக்காகதானுங்க அவர்களை சேர்க்கும் போது விஷயம் எங்கோ மூலையில் இருக்கும் ஒரு கிராமதத்தானுக்கும் போய் சேரும் அதை உணர்ந்து அவரும் போராடவருவார் என்பதுதான் என் கருத்துங்க அது தவறா?

      ஒரு நல்ல விஷயத்திற்கு நடிகர்களின் பாப்ப்புலாரிட்டியை உபயோகிப்பது தவறா??

      Delete
  3. பட்டிக்கட்டான் ரஜினியை தாக்கி மம்மூட்டியை உயர்த்தி கிண்டல் பண்ணியிருக்கார் தோழரே..

    ReplyDelete
  4. நடிகர்கள் குரல் கொடுப்பதால் எந்த மாற்றமும் வந்து விடப் போவதில்லை.நடிகர்கள் தங்கள் வாழ்வு நிலையில் மாற்றம் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் கூடிக் கோஷம் போடுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  5. முடிவில் சொன்னது நடக்கலாம்...

    ReplyDelete
  6. Replies
    1. தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  7. ரஜினியாவது போராட்டத்தில் கலந்துகொள்ளப் போவதாவது. இந்நேரம்
    வெளிநாட்டுக்குப் பறக்க டிக்கெட் எடுத்திருப்பார்

    ReplyDelete
  8. கொசுவடையான் படத்தில் நடிப்பதால் இப்ப வந்துட்டு ( இல்லையென்ர்றால் ஷூட்டிங் தடைபடுமே...), படம் ரிலீஸ் ஆகும் போது கர்நாடகாவிடம் மன்னிப்பு கேட்டு விடுவார்... அவரிடம் இல்லாத பல்டி டெக்னிக்குகளா ?

    ReplyDelete
    Replies
    1. தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  9. Karuththu solrathuku munnadi nengalam konjam kuda yosikka mattingala brothers... Karuththu solra yathana peru intha mathiri porattathula kalanthukittu irukkinga... Karuppu panaththai ozhikka vendumnu ANNA HASARE oru porattam nadathunare yaththana peru ya kalanthukittinga...?
    Oruthan Sudhantharama iruntha tamizhan oruthanukku kuda pidikkathe... Yosinga ya, avanga avanga idathula irunthu yasichu karuththu sollunga, ilana padichi paththuttu karuthu sollama poikitte irunga...

    ReplyDelete
  10. ரஜினி சாயம் வெளுத்து ரொம்ப நாளாச்சு சகோ

    ReplyDelete
  11. இன்னுமா அந்த வேசதாரியை நம்பிகிட்டு இருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  12. "மிக நெருங்கிய நண்பர் பிரபுவின் மகன், சிவாஜியின் பேரனின் படத்தின் ஆடியோ ரிலீசுக்கே போக முடியாமல், கஷ்டப் பட்டு கடைசி நிமிடத்தில் வந்தார். அந்த நிலையிலும் அவரை போராட்டக் கலத்துகெல்லாம் அழைப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றுகூட நான் சொல்லுவேன். பாவம் அவரை விட்டு விடுங்கள், அவர் விருப்பம் போல வாழ விடுங்கள்."

    ஆமா பால் தாக்கரே கூப்பிட்டால் பிடரியில் கால் பட ஓடி போவார் இந்த கீழ்த் தரமான வேஷதாரி

    ReplyDelete
  13. ஹஹ்ஹா நல்ல காமெடிப் பதிவு :-)))

    ஒரு கமெண்ட் போட்டா அதனோட சாராம்சத்தை புரிஞ்சிக்கிற சாதாரணப் புரிதல் கூட இல்லை. நீங்க எல்லாம் பொங்கி....வழிஞ்சி.... ஆமாம் மத்த பதிவுகளும் இந்த மாதிரி தான் எழுதி இருக்கீங்களா பாஸ்.

    இல்லை பச்சக் குழந்தை படிச்சா கூட அந்த கமெண்ட் ரஜினி காந்தை கிண்டல் அடிச்சி போட்ட கமெண்ட்னு புரிஞ்சிப்பாங்க. அத விடுங்க... அதுக்கடுத்து பின்னூட்டங்கள் பார்த்தாலும் தெரிஞ்சிருக்கும். போர போக்குல படிச்சி.... என்ன ஏதுன்னு புரியாமைலே பொங்கிடரதா...

    உமக்கு ஒரு பொங்கள் வைக்கனும் அப்பதான் அதுக்கப்புறம் மத்தவங்க என்ன சொல்லிருக்காங்கணு பொறுமையா படிச்சி ஒழுங்கா எழுதுவீங்க.

    அவர்கள் உண்மைகள் அண்ணேன்/சார் வாழ்க. இன்னும் இதுபோல் பல விழிப்புணர்வு பதிவுகள் எழுதி சமுதாயச் சேவை புரிய வாழ்த்துகள்.

    அங்கே வாழ்த்துனத நம்பினா மாதிரி இங்க உங்களை வாழ்த்திருக்கேன். நண்ரி சொல்லிண்டுங்க என்ன. :-))))

    ReplyDelete
    Replies
    1. நீங்கல் கிண்டல் அடிப்பதை புரிந்துதான் அதைவைத்து ரஜினி ரசிகர்களை கிண்டல் செய்து எழுதி இருக்கிறேன் அதைதான் நீங்கள் புரிந்து கொள்ள வில்லை நண்பரே

      //இதுபோல் பல விழிப்புணர்வு பதிவுகள் எழுதி சமுதாயச் சேவை புரிய வாழ்த்துகள்.///


      நான் கிறுக்குவதையெல்லாம் விழிப்புணர்வு பதிவுகள் என்று நீங்கள் நினப்பதுதான் என்னை வியக்க வைக்கிறது


      ரஜினிய பற்றி எழுதினா சமுதாயச் சேவையா ஆஹா இதுவரை எனக்கு தெரியாமல் போயிடுச்

      Delete
    2. தங்களின் விளக்கம் படித்து.... புரிந்து புல்லரித்துப் போனேன். நன்றி. :-)))))

      Delete
  14. //
    இதற்கு Pattikaattaan Jey என்பவர் இட்ட கருத்து

    இவரு இந்த கோவிலுக்கே டொனேசன் குடுத்துக்கட்டும். சிவகாசி விபத்து மாதிரி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மம்மூட்டி கொடுத்துப்பார். வாழ்க ரஜினி சார்...ஓங்குக அவரது புகழ். //

    இந்தக் கருத்தோட சாராம்சம் புரியலைனா .... உங்க டைம் லன்ல போட்ருக்கிற ”மதுரைத் தமிழன்” கேப்சனைத் தூக்கிருங்க... ஏன்னா அது சங்கம் வளர்த்த மதுரைக்குக் கேவலம். :-)))))))

    ReplyDelete
  15. தங்களின் இந்த பதிவில் கமெண்ட் மாடுரேசன் வைத்திருப்பதால்...உங்களின் இந்தப் பதிவைப் பாராட்டி நான் ஒரு பதிவு எழுதி உங்களூக்கு ஓசியில் விளம்பரம் செய்திருக்கிரேன். படிக்கவும். நன்றி. :-)))

    அவர்கள் உண்மைகள் @ மதுரைத் தமிழனுக்கான பாராட்டுப் பதிவு . :-)))
    http://pattikattaan.blogspot.in/2012/10/blog-post_13.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி இப்போதுதான் உங்கள் பதிவிற்கு உங்கள் தளத்தில் விளக்கம் தந்துள்ளேன் படித்து புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்

      Delete
  16. அரசாங்கம் செய்யவேண்டியதை ஒரு தனி மனிதன் செய்ய வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் ரஜினி மட்டும் தான் பணம் பன்னுகிரார? டாக்டர்கள், என்ஜினீயர்கள், நடிகைகள், இப்பை...ரஜினி மட்டும் ஏன் கொடுக்க வேண்டும்?

    அதே சமயம் அவர் என் தமிழ் மண்ணே அப்படின்னு புளுகுணா நல்லா கேளுங்க? மீதி பேர் மாதிரி வாயை மூடிக்கோ என்று சொல்லுங்கோ!

    நீங்க அமேரிக்கா வந்து ரொம்ப வருடம் ஆகிவிட்டது என்று நினைக்கிறன். தமிழ் நாடு இந்தியர்கள் சுரண்ட ஏற்படுத்தப் பட்ட மாநிலம். வளத்தை சுரண்டுவது இங்கே; மற்ற மாநிலத்தின் குப்பையை கொட்டுவதும் இங்கே.

    ஏன் ரஜினியை கேட்ட கேள்வியை நம்ம முதல் அமைச்சரையும் கேட்கலாமே! அவர்களும் கர்நாடகம் தானே! முல்லைப் பெரியாரில் எம்ஜீயரைக் கேட்டிரிருக்கலாமே! இதில் ஆந்த்ராக்காரன் பரவாயில்லை; தண்ணியாவது கொடுத்தான்!

    ReplyDelete
    Replies
    1. //ஏன் ரஜினியை கேட்ட கேள்வியை நம்ம முதல் அமைச்சரையும் கேட்கலாமே!//
      முதல்வர் ஜெயலலிதா ஏதோ முதலைமைச்சர் கடமை என்று ஏதோ சிறிது முயல்கிறார். ஆனால் பொதுமக்களும் அதிக அளவில் போராட வேண்டும் மேலும் பாப்புலாரிட்டி உள்ள நடிகர்கள் மற்றும் பல துறை ஆட்களும் இதில் கண்டிப்பாக கலந்து கொண்டு கர்நாடக அரசிற்கும் நம் தமிழக் அரசிற்கும் பிரஷர் தர வேண்டும்தானே?

      Delete
    2. உச்ச நீதிமன்ற ஆணையை மதிக்காத காட்டான்கள்; மாநில அரசும் அப்படியே; முதல் அமைச்சர்களும் அப்படியே; மந்திகளும் அப்படியே.

      பழங்குடி மக்களை துப்பாக்கி உபயோகித்து வெளியேற்றி நாட்டை கொள்ளையடிக்க; ஏழைகள் வசிக்கும் இடங்களை கையகப் படுத்த, இப்படி...இதுக்குதான் உச்சநீதி மன்றம்!

      இந்தியா என்ன நாடா அல்லது காடா?

      Delete
  17. ரஜினி சிறந்த நடிகர் மட்டுமல்ல
    மிகவும் புத்திசாலியும் கூட
    தன் பாப்புலாரிட்டியை தொடர்ந்து
    பாதுகாத்து எப்படி
    அதைக் கொண்டு அதிகப் பணம் பண்ணுவது எப்படி
    அதற்கு ஆபத்து வராமல் இருக்க
    அனைத்து தரப்பு அரசியல்வாதிகளையும்
    பயன்படுத்துவது எப்படி என்பதெல்லாம்
    அவருக்கு அத்துப்படி
    நாம்தான் அவரை புரிந்து கொள்ளவில்லை
    அவர் நமமை மிகச் சரியாக புரிந்து வைத்துக் கொண்டுள்ளார்
    வாழ்க ரஜினி வளர்க அவரது புகழ்

    ReplyDelete
    Replies
    1. ரஜினி நல்லவர் புத்திசாலி யாரையும் தனிப்பட்ட முறையில் கெடுக்கவில்லை அரசியல் வாதிகள் போல சமுகத்தை ஏமாற்றவில்லை என்பதுதான் என் கருத்தும் மேலும் நம்மை வாழவைக்கும் சமுகத்திற்கு ஆதரவாக குரல் தர வேண்டும் என்பதுதான் நான் சொல்ல வருவது. உதாரணத்திற்கு நான் தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்குஅநேக ஆண்டுகளுக்கு முன் வந்தவன் தான் ஆனால் அநேக அமெரிக்க வேலைகள் இந்தியாவிற்கு அனுப்பபடுமானால் அதற்கு எதிராகவே குரல் கொடுப்பேன். காரணம் என்னை வாழ வைக்கும் இந்த அமெரிக்க சமுதாயம் என் முன்னாள் கஷ்டப்படுவதை எப்படி பார்க்க முடியும்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.