Thursday, September 27, 2012







விமானபயணத்தின் போது மன்மோகன் சிங் வாயை அடைத்த தமிழகச் சிறுமி!


அமெரிக்காவில் வசிக்கும் தமிழக சிறுமி தமிழகத்தில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு சென்று விட்டு விமானத்தில் திரும்பி வந்தார். அப்போது இந்தியாவை அமெரிக்கர்களிடம் அடகு வைக்க வந்த  மன்மோகன் சிங் அந்த சிறுமிக்கு அடுத்த சீட்டில்  அமர்ந்து இருந்தார். இந்தியாவில் இருக்கும் போது ஊமையக இருக்கும் அவர் விமானத்தில் அமர்ந்ததும் பேச ஆசைப்பட்டு அந்த சிறுமியிடம் பேச விரும்பி நாம இரண்டு பேரும் பேசலாமா என்று கேட்டார்.

அதற்கு அந்த தமிழகச் சிறுமி அவரை ஆச்சிரியமாக பார்த்து எது பற்றி பேசலாம் என்று கேட்டார்

அதற்கு அவர் சில்லறை வாணிகத்தில் அந்நிய முதலீடு பற்றி பேசலாமா என்று கேட்டார்.

அவர் சொன்னதை கேட்டு குழப்பம் அடைந்த அந்த சிறுமி ஒகே ஆனா அதற்கு முன்பு உங்களிடம் ஒரு கேள்வி கேட்கட்டுமா என்று கேட்டாள்

அவரும் அதற்கு சரி என்றார்

உடனே அந்த பெண் மிஸ்டர் சிங் மாடு, குதிரை, மான் மூன்றும் புல்லை தின்னுகின்றன ஆனால் அவை சீரணமாகி வெளிவரும் போது மான் சிறு சிறு உருண்டை உருண்டையாகவும் மாடு கொழ கொழவென்றும், குதிரை சிறிது பெரிய  பெரிய உருண்டை வடிவமாகவும்   வெளிவருகிறது அது ஏன் எப்படி என்று கேட்டாள்

அதை கேட்ட சிங்க் திரு திருவென்று முழித்து இறுதியில் எனக்கு தெரியவில்லை என்று சொன்னார்.


உடனே அந்த சிறுமி அவரை பார்த்து இந்த் ஷிட்(shit) டைப் பற்றி கூடத் தெரியவில்லை உண்மையிலேயே நீங்க என் கூட 'சில்லறை வாணிகத்தில் அந்நிய முதலீடு" பற்றி டிஸ்கஸ் பண்ண விரும்புகிறீர்களா என்று கேட்டாள்

அதன் பின் அமெரிக்க சென்று இறங்கும் வரை சிங் சாப்பிடாமல் கண்ணை மூடி பிரயாணம் செய்தார்

நீதி : ஆளின் தோற்றத்தை வைத்து யாரையும்  எடை போட வேண்டாம். சில சமயங்களில் குழந்தைகளின் அறிவுத்திறன் பெரியவர்களின் திறனை விட அதிகம் இந்த காலத்தில்


அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்

6 comments:

  1. நல்ல நீதி...

    குழந்தைகளிடம் நாம் தான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்...

    ReplyDelete
  2. இவருக்கு ஈனம், மானமெல்லாம் இருக்கும்னு தோனல..........

    ReplyDelete
  3. சாட்டை அடி !...கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பார்கள் அவை இதைத்தானோ !...
    அருமையான படைப்பு .மிக்க நன்றி சார் பகிர்வுக்கு .

    ReplyDelete
  4. ஹா ஹா நீதிக்கதை நல்லா இருக்கு, அதுக்காக யார் வம்பு, தும்புக்கு போகாம தேமேன்னு பேசாம இருக்குற பிரதமர்தானா உங்களுக்கு கிடைத்தார்?!

    ReplyDelete
  5. நன்றாக பாடம் கற்பிக்கப் பட்டது.

    ReplyDelete
  6. குழந்திகளின் அறிவுத் திறன் எப்போதுமே பெரியவர்களைவிட உயர்ந்தது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.