Wednesday, August 1, 2012




ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் பெறாததற்கு இந்திய அரசியல்வாதிகள்தான் காரணம்

இந்தியாவில் இருந்து இவர்கள் ஒலிம்பிக்கில்  கலந்து இருந்தால் நிச்சயம் இந்தியா அதிகம் தங்கம் பெற்று இருக்கும்

சுடும் போட்டி : சுடும் போட்டியில்(ஊழலில்) சோனியா அவர்கள் முதலிடத்தை பெறுவார்

அந்தர்பல்டி : அந்தர்பல்டி போட்டியில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் முதலிடம் பெறுவார்.

கால்பந்தாட்டம் : கால்பந்தாட்ட போட்டியில் இன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா முதலிடம் பெறுவார்

மீயுஸிக்கல் சேர் : மீயுஸிக்கல் சேர் போட்டியில் தமிழக காங்கிரஸ் தலைவர் தேசிகன் முதலிடம் பெறுவார்

குத்துசண்டை : குத்துசண்டை போட்டியில் விஜயகாந்த் முதலிடம் பெறுவார்.

அழுகுனி : அழுகுனி ஆட்டத்தில் ராமதாஸ் முதலிடம் பெறுவார்

போட்டிகள் நியாமாக நடப்பதில்லை என்பதால் வைகோ அவர்கள் கலந்து கொள்ளமாட்டார்

போட்டியில் கலந்து கொள்ள பிஜேபிக்கு தகுதியில்லை என்று நிராகரிக்கப்படுவார்கள் .


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
2012

13 comments:

  1. Replies
    1. தமிழனுக்கே உள்ள நக்கல்தாங்க

      Delete
  2. இந்தப் போட்டிகளை எல்லாம் அடுத்த ஒலிம்பிக்கிலாவது சேர்க்கப் பட வேண்டும் என்று மதுரைத் தமிழன் சார்பாகக் ஒலிம்பிக் சங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.
    ஆமாம்.தமிழ்மணம் ஓட்டுப பட்டை எங்க காணோம்!

    ReplyDelete
    Replies
    1. அதை யாராவது எடுத்துட்டு போய்ட்டாங்களா?????? நம்ம வலைத்தளம் வரும் போது ஒட்டை பற்றி கவலைப்படவேண்டாம் நண்பா

      Delete
  3. எவ்வள்வு பணம் செலவழித்தாவது இந்த்ப் போட்டிகளை
    ஒலிம்பிக்கில் சேர்க்க முயல்வோம்
    அப்புறம் நம்முடன் முடிந்தால் எந்த நாடும்
    போட்டிக்கு வந்தாகட்டும் பார்க்கலாம்
    ஒலிம்பிக்கில் வெல்ல சுலபவழி
    சொல்லிப்போகும் அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முயற்சிக்கு நன்றி

      Delete
  4. தமிழனுக்கே உள்ள நக்கல்தாங்க//

    அதுவும் மதுரைகாரங்களுக்கு கொஞ்சம் கூடத்தான்னு போல. போனவாரம் மதுரக்கார பள்ளிகூடத்து பசங்க பள்ளிகூடத்து பெஞ்ச உடைச்சு மரக்கடைல வித்து தண்ணியடிச்சாங்க படிச்சேன், ஓவராயில்ல?

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் வேறு ஊரு வாத்தியார் சொல்லி கொடுத்த ஐடியாவாகத்தான் இருக்கும்

      Delete
  5. நடக்கட்டும் நையாண்டி

    ReplyDelete
    Replies
    1. நையாண்டில கலந்து கொண்டதற்கு நன்றி

      Delete
  6. ரொம்பவே யோசிச்சு பதிவு போட்டிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இதுகெல்லாம் ரொம்ப யோசிக்க வேண்டாம். நம்ம அரசியல் வாதியின் தினசரி நடவடிக்கைகளை எழுதி சென்றால் எல்லோரும் சூப்பர் காமெடி என்று நினைத்து நம்மை பாராட்டுவார்கள்

      Delete
  7. இது நகைச்சுவையான பதிவு அல்ல
    உண்மையான பதிவு





    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.