Monday, July 2, 2012


சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா? பெண்களே.

ஒவ்வொரு பெண்ணின் கனவிலும்
கனவுக் குமாரன் வந்து
அவர்களை குதிரையில் அழைத்து செல்வதாக
கனவு காண்பார்கள்  என்று அந்த காலத்தில் படித்து இருக்கிறேன்
அதில் ஏதும் மாற்றம் உண்டா ?
அல்லது
இந்த காலப் பெண்களின்
கனவில் கனவு குமாரான் வந்து
மெர்சிடிஸ் காரில் அழைத்து செல்வதாக
கனவு காண்பிர்களா ?

என் சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா? பெண்களே.

ஆண்களும் இந்த மாதிரி கனவு காண்பீர்களா என்று கேட்கும் பெண்களுக்கு ஒரு ஆணின் பதில் இங்கே:

எங்கள் கனவிலும் கனவுக் குமாரிகள் வருவார்கள் ஆனால் உங்களைப் போல குதிரையிலோ காரிலோ விமானத்திலோ தூக்கி போவதாக கனவு காண்பதில்லை எங்கள் கனவில் வரும் கனவுக் குமாரிகள் எங்களின் கைகளோடு கைகளாக கோர்த்து கொண்டு அமைதியாக நடந்து செல்ல வேண்டும் என்றுதான் கனவு காண்போம்( பாயிண்டை நோட் பண்ணிக் கொள்ளுங்கள் இங்கே. நான் சொன்னது அமைதியாக..ஹீ.ஹீ.ஹீ.....)


எனக்கு பிடித்த பழைய பாடல் இன்று

கையில் மிதக்கும் கனவா நீ????

கனவா? நீ காற்றா?
கனவா? இல்லை காற்றா?
கையில் மிதக்கும் கனவா நீ?
கைகால் முளைத்த காற்றா நீ?
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே!
நுரையால் செய்த சிலையா நீ?
இப்படி உன்னை ஏந்திக்கொண்டு
இந்திரலோகம் போய்விடவா?
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்
சந்திரத் தரையில் பாயிடவா?

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி
அதைக் கண்டு கொண்டேனடி
…..!

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாதே!

உன் பளிங்கு முகத்தைப் பார்த்துக் கொண்டால்
பசியோ வலியோ தெரியாதே!
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாதே!
உன்மேல் வந்தொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாதே!


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் எண்ணங்கள் கிறுக்கல்களாக உங்கள் பார்வைக்கு

3 comments:

  1. kuzhanthai padangal!
    arumai!

    paadalai varyaakkiyathu-
    arumai!

    ReplyDelete
  2. //உங்களைப் போல குதிரையிலோ காரிலோ விமானத்திலோ தூக்கி போவதாக கனவு காண்பதில்லை எங்கள் கனவில் வரும் கனவுக் குமாரிகள் எங்களின் கைகளோடு கைகளாக கோர்த்து கொண்டு அமைதியாக நடந்து செல்ல வேண்டும் என்றுதான் கனவு காண்போம்///

    உண்மை!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.