Friday, July 27, 2012




உலகின்  பணக்கார அரசியல்வாதிகளில் 4 வது இடத்தை பெற்ற இந்திய அரசியல்வாதி யார்?

இந்தியாவில் மிகப் பெரிய பதவியான ஜனாதிபதி, பிரதமர் பதவியை இவர் வகிக்கவில்லை ஆனால் அந்த அதிகாரப் பதவி வகிப்பவர் இவரின் ஆணையை ஏற்றுதான் செயல்படுவார்கள் அவர் வேறு யாருமல்ல இந்தியாவில் தற்போது வானாளாவிய அதிகாரம் படைத்த காங்கிரஸ் தலைவி சோனியா காந்திதான் உலகின்  நாலாவது பணக்கார அரசியல்வாதி. இவரின் சொத்து மதிப்பு  $2-19 மில்லியன் அல்ல பில்லியன் (Rs 10,000-95,000 கோடி). ஆனால் 2009 பொது தேர்தல் சமயத்தில் சோனியாகாந்தி வெளியிட்ட அவரின் சொத்து மதிப்பு Rs 50-75 லட்சம் மட்டுமே...

முதல் இடத்தை சவுதி அரபியாவை சார்ந்த  Abdullah Bin Abdul Aziz என்பவரும் இரண்டாம் இடத்தை ப்ருனை நாட்டை சார்ந்த Hassanal Bolkiah அவரும் மூன்றாவது இடத்தை  நீயூயார்க் நகர மேயர்  Michael Bloomberg என்பவரும் நான்காவதாக இந்திய காங்கிரஸ் தலைவியான Sonia Gandhi பிடித்துள்ளனர். பாவம் நமது பக்கத்து நாடானா  பாகிஸ்தான் பிரசிடெண்ட்  Asif Ali Zardari 19 வது இடத்தை பெற்றுள்ளார்.


இதை நான் சொல்லவில்லை .அமெரிக்காவில் இருந்து வெளி வரும்  பிஸினஸ் இன்சைடர் என்ற பிரபல வலைத்தளம் கூறியுள்ளது .இது பிஸினஸ்/எண்டர்டெய்மெண்ட் செய்திகளை தாங்கி வெளிவரும் ஒரு பிரபல வலைத்தளம். இது 2009 ல் தொடங்கி நீயூயார்க்கில் இருந்து வெளி வருகிறது. இதன் C.E.O கெவின் பி, ரேய்ன் என்பவர்.


இந்த செய்தி Businessinsider ல் வந்த தகவலின்படி இங்கு என் வழியில்  தரப்பட்டள்ளது  மேலும் அதிக தகவலுக்கு (For more details, ) visit http://www.businessinsider.com/richest-politicians-in-the-world-2012-2?op=1


அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

36 comments:

  1. அப்படி போடு அருவாளை .. அப்போ சோனியாக் காந்தி கலைஞரை விட அதிகமாக வைத்துள்ளார்.. ஒரு எம்பிக்கு இவ்ளோ சொத்தா ...

    ReplyDelete
    Replies
    1. இது வெளி உலகு அறிந்த சொத்து அறியாதது எவ்வளவோ?

      Delete
  2. Replies
    1. எங்க போக சொல்லிறீங்க சோனியா வீட்டுக்கா?

      Delete
  3. தகவலுக்கு நன்றி...
    (வேறென்ன செய்வது ?)

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் பேசமா காங்கிரஸ் கட்சி தலைவராக ஆகிவிடுங்கள் இப்போது புறிகிறதா என் தமிழகத்தில் உள்ள எல்லா காங்கிரஸ்காரர்களும் என் தலைவர் ஆக ஆசைபடுகிறார்கள் என்று

      Delete
  4. வினாவிற்கு விடையைத் தெரிந்து கொண்டேன்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி

      Delete
  5. ஜெய் ஹோ... இவங்களைச் சொல்லி பிரயோஜனமில்லீங்க... இவங்களை எல்லாம் தலைவர்கள்ன்னு நம்பிட்டிருக்காங்களே நம்ம அப்பாவி ஜனங்க... அவங்களைச் சொல்லணும்!

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் அப்பாவி மக்கள் அல்ல நாட்டு நலனில் அக்கறை இல்லாமக்கள் என்றுதான் சொல்லவேண்டும்

      Delete
  6. ஸ்பெக்ட்ரம் பணம் எல்லாம் எங்கடா போச்சுன்னு நினைச்சேன்... இப்பதானே தெரியுது...

    ReplyDelete
    Replies
    1. கொள்ளை அடிக்கிறதுதான் அடிக்கிறாங்க அதையாவது இந்தியாவில் முதலீடு செய்தாவது வேலைவாய்ய்ப்பை பெருக்கி நாட்டு முன்னேறத்திற்காகவது கொஞ்சமாவது பாடுபடலாமே

      Delete
  7. //சோனியாகாந்தி வெளியிட்ட அவரின் சொத்து மதிப்பு Rs 50-75 லட்சம் மட்டுமே...//
    பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேணாமா சோனியா?

    ReplyDelete
  8. இவங்களையெல்லாம் எம்.பியாக்கி தலைவராக்கிய நம்மை நாமே நொந்துகொள்வதை தவிர வேறு வழியில்லை! சிறப்பான தகவல்! நன்றி!

    இன்று என் தளத்தில் பூனையும் எலியும் பாப்பாமலர்! http;//thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி

      Delete
  9. போபர்ஸ் ஊழல் பணம் சுவிஸ் வங்கியில் இருக்கின்றது அதையும் சேர்த்தால் அம்மாடியோ?புத்தியில்லா ஜீவன்கள் புரட்டுச்செய்யும் அரசியல் வாதிகள் பேச்சை நம்பி எல்லா வற்றை யும் இழந்து நிர்க்கதியாய் நிற்கின்றது தேசமும் அவர்களும் !

    ReplyDelete
    Replies
    1. படித்தவர்கள் ஒட்டுபோட ஒதுங்கினால் இலவசம் வாங்கி பிழைக்கும் மக்கள் இப்படிபட்ட தலைவர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்

      Delete
  10. kavala padathinga antha kasu panam yellam avanga sagum pothu onnum yeduththuttu poga mattamga

    yarukkathu kuduthu uthavina nalla perathu minjum

    ReplyDelete
    Replies
    1. நல்ல பெயரை வைச்சு என்ன பண்ணறதுங்க என்றுதான் இவங்க எல்லாம் இப்படி ஆட்டம் போடுறாங்க

      Delete
  11. உண்மையான பதிவு

    நன்றி,
    ஜோசப்
    --- ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)

    ReplyDelete
  12. மக்களே மனம் தளர்ந்து விடாதீர்கள். அடுத்த எலெக்சனுல மட்டும் இத்தாலி அன்னைக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். அவர் நிச்சயம் முதலிடத்தை பிடித்து காட்டுவார்!

    ReplyDelete
  13. Replies
    1. உருப்படுமோ இல்லையோ ஆனா சில பேர் நம்நாடு வல்லரசு நாடாக ஆகிவிடும் என்று கனவு காண்கிறார்கள்

      Delete
  14. சில தேவையற்ற, வரம்பு மீறிய, அநாகரீகமான கமெண்டுகளை நீக்கிவிடலாமே

    ReplyDelete
    Replies
    1. சிலருக்கு "சில நபரின் செயல்கள் பிடிக்காததால்" அவர்கள் மீது எழும் வெறுப்பு காரணமாக அப்படி சொல்லியிருக்கிறார்.அதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனாலும் யார் மனதையும் புண்படுத்த நான் பதிவு எழுதாதால் உங்கள் வேண்டுகோளின் படி அந்த கருத்து மாற்றி அமைத்து வெளியிடப்பட்டுள்ளது.

      Delete
    2. நன்றி. உங்கள் கருத்தில் உடன்படுகிறேன், ஆனால் எல்லோரும் தங்களுக்கு பிடிக்காதவர்கள் விஷயத்தில் பொதுவில் இவ்வாறு வரம்பு மீறி நடப்பதில்லை

      Delete
  15. Jayadev DasJuly 28, 2012 5:05 AM சொன்ன கருத்தில் ஒரு ஒரு மாற்றம் ஏற்படுத்தி அவர் சொன்ன கருத்து சிதையாமல் அப்படியே கிழே தந்திருக்கிறேன்.

    அப்படியே அஞ்சாவது இடத்துல யார் இருக்காங்கன்னு பாருங்களேன், அவர் துண்டு போட்டிருப்பார், கலர் மஞ்சள் ஆக கூடஇருக்கும், யார் கண்டது.......

    ஜெயதேவ் இந்த மாற்றத்திற்காக என்னை மன்னித்து கொள்ளுங்கள். தொடர்ந்து உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கருத்திடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஜெயதேவ் இந்த மாற்றத்திற்காக என்னை மன்னித்து கொள்ளுங்கள். தொடர்ந்து உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கருத்திடுங்கள்

      Delete
  16. காங்கிரஸ்ல எனக்கொரு வட்ட செயலாளர் பதவியாவது வாங்கி தாங்க சகோ. அட்லீஸ்ட் நான் இந்தியாவுலயாவது டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம்புடிக்குறேனே.

    ReplyDelete
  17. குடுமி பிடி சண்டை குழாய் அடியில நல்லா போடத் தெரிஞ்ச சொல்லுங்க நான் ரெகமெண்ட் பண்ணுறேன்

    ReplyDelete
  18. ஆஹா சோனியாகானுக்கு இம்புட்டு சொத்தா....?

    ReplyDelete
    Replies
    1. அதில் உங்களுக்கும் பங்கு உண்டு என்று கேள்விபட்டோமே அது உண்மையா?

      Delete
  19. இந்தியனின் தலைஎழுத்து அந்த வெள்ளைகாரனின் கையில் இருந்து மீண்டு வந்து இந்த கொள்ளைக்காரர்களின் கையில் மாட்டிக்கொண்டு விளிக்கின்றது

    ReplyDelete
    Replies
    1. வெள்ளைக்காரன் கையில் இருந்த போது அவன் இந்த நாட்டுக்கும் செய்துவிட்டு அதே சமயத்தில் தன் நாட்டுக்கும் சேர்த்து கொண்டான். இவர்கள் எந்த நாட்டுக்கும் சேர்க்காமல் தன் குடும்பத்திற்கு மட்டும் சேர்த்து கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.