Monday, June 25, 2012

மனைவி சொல்லை தட்டாதே.

மக்களே நான் அதிகம் சொல்லப் போவதில்லை.(அந்த அளவிற்கு பேச அனுமதி இல்லை ஹீ..ஹீ) அதனால் கிழேயுள்ள படத்தை பார்த்து அதன் படி நடந்து கொள்ளுங்கள்

                                                      



யாரப்பா அது சவுண்ட உடுறது....மனைவிக்கு நாயே மேல் நாய் ஹவுஸ் நல்லது என்று. அதை எல்லாம் இங்கே வந்து சவுண்டு வீடாத்திங்க உங்க மனைவி முன்னால் சவுண்ட விடுங்க...


ஹலோ ஏதோ சவுண்ட் கேட்குதுங்க  என் பின்னால இரு நிமிஷம் எட்டி பார்த்துடுறேன்....ம்ம்ம்ம்ம்ம்ம் ஒ அது என் செல்லக் குட்டிங்க..... செல்ல குட்டின்னு நீங்க சொன்னது உங்க மனைவியைவா அல்லது உங்கள் நாயையா என்று கேட்பது என் காதில் விழுகிறது . ஆனா அதற்கெல்லாம் பதில் சொல்லி வம்பில மாட்ட விருப்பம் இல்லைங்க



தம்பதிகள் வாய்விட்டு சிரிக்க நான் நெட்டில் படித்த ஜோக்ஸ் இங்கே சிறிது மாற்றி வெளியிடப்பட்டுள்ளது

மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: செல்லம் உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..

இரண்டு நண்பர்கள் பாரில்…
கணேஷ்: சே!. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?
மதுரைத்தமிழன்: நேத்து என் பொண்டாட்டிய முட்டி போட்டு நடக்க வச்சேன்.
கணேஷ்: ஆஆ.. அப்புறம் என்ன நடந்துச்சி சொல்லு   மச்சி சொல்லு?
மதுரைத்தமிழன்: அப்புறம் சொன்னா.. “மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு

புயல் மழையில் மதுரைத்தமிழன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்….
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…
மதுரைத்தமிழன்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க…!??

கடவுள்: மதுரைத்தமிழா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மதுரைத்தமிழன்: இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே…வேறு ஏதாவது கேள்.
மதுரைத்தமிழன்: அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும், நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், எதையும் வாங்கிக் கொடுங்கன்னு கேட்கக் கூடாது…
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?

மனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.
மதுரைத்தமிழன்: அடப்பாவி…! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?

மனைவி: என்னங்க.. நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?
மதுரைத்தமிழன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
மதுரைத்தமிழன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்!!

12 comments:

  1. Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      ரசித்து சிரித்தற்கு நன்றி

      Delete
  2. அடி வாங்கினாலும் அதை சொல்ல வெக்கப் படாத தைரியமானவன் தமிழன்தான் சார்.உங்க பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      என் பின்னாடி ஒரு கூட்டமா....அப்ப நான் தலைவர் ஆகிவிடவா

      Delete
  3. போட்டு தாக்கு - அட்ரா அட்ரா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நண்பா யாரை போட்டு தாக்க சொல்கீறிர்கள்

      Delete
  4. வாய் வலிக்குது....தமிழா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      என்ன நீங்களும் வீட்டில் வாங்கி கட்டி கொண்டிர்களா?

      Delete
  5. பைத்தியங்க என்ன வேனா பண்ணுங்க .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      ஹீ..ஹீ.ஹீ

      Delete
  6. Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஜோக்ஸ் எல்லாம் எனது படைப்பு அல்ல நெட்டில் படித்தது & ரசித்தது

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.