Thursday, June 7, 2012




பெண் என்றாலே சுகம்தானோ...............


அம்மாவின் மடியில்  தலை சாய்க்க,
அவளும் மெதுவாய் நம் தலை கோத,
எத்தனை வருடமானாலும் மாறாத அவள் அன்பில்
அவள் புடவை வாசனையில் மனம் மயங்க
அந்த அனுபவம் என்றும் சுகமாக இருக்கிறதே...
இந்த அப்பாவி ஆண்களுக்கு

அது போல காதலியின்  மடியில் தலை சாய்க்க,
அவளும் மெதுவாய் நம் தலை கோத,
அந்த அனுபவமும் சுகமாக இருக்கிறதே.... 
இந்த அப்பாவி ஆண்களுக்கு

(இது எனது எல்லா காதலிகளுக்கும் பொருந்தும். அப்பா தப்பிச்சோமாடா  பழைய காதலிகளை பார்த்தால் இதை அவர்களை நினைத்துதான் எழுதியது என்று சொல்லி சமாளித்து விடலாம்)


( இதை எழுதும் போது மனைவி சமையல் கரண்டியோடு வருகிறாள் சமையலில் சந்தேகமா அல்லது இந்த அப்பாவி கணவன் மீது சந்தேகமா தெரியவில்லையே. எதற்கும் அவளை பற்றியும் இரண்டு வரி எழுதிவிடுவோம்.)

அது போல மனைவியின்  மடியில் தலை சாய்க்க,
அவளும் மெதுவாய் நம் தலை கோத,
அந்த அனுபவமும் சுகமாக இருக்கிறதே.... 
இந்த அப்பாவி ஆண்களுக்கு


அது போல சிணுங்கிவரும்  நம் குழந்தை
நம் மடியில் தலை சாய்க்க
நாமும் மெதுவாய் பாசத்தோட அவள்  தலை கோத,
அந்த அனுபவமும் சுகமாக இருக்கிறதே....
இந்த அப்பாவான ஆண்களுக்கு

பெண்ணே நீ எந்த முறையாக இருந்தாலும் ஆண்களுக்கு சுகமாய்தான் இருக்கிறாய்!!!!!



அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன் எழுதிய கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்காக

4 comments:

  1. பெண்ணே நீ எந்த முறையாக இருந்தாலும் ஆண்களுக்கு சுகமாய்தான் இருக்கிறாய்!!!!!//

    அருமை அருமை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சுகம் என்பவர்களை சுமை என நினைக்காதவரை .

    ReplyDelete
  3. இன்பமே உந்தன் பேர் பெண்மையோ

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.