Sunday, January 8, 2012



எனக்கொரு காதலி தேவை

காதலியாக இருந்த போது
என்னை தெய்வம் என்று சொன்னவள்
மனைவியாக மாறிய போது
என்னை எமன் என்று சொல்லுகிறாள்
-------
காதலியாக இருந்த போது
என்னை பட்டாம் பூச்சிபோல
சுற்றி வந்தவள்
மனைவியாக மாறிய போது
கொசுவைப் போல
என்னை சுற்றி வருகிறாள்
---
காதலியாக வந்து
கொஞ்சம் கொஞ்சமாக
இதயத்தை எடுத்தவள்
மனைவியாகிய மாறிய பிறகு
உங்களுக்கு இதயமே இல்லை
என்று சொல்லி
கொஞ்சம் கொஞ்சமாக
என் உயிரை எடுக்கிறாள்
-------
காதலி மனைவியாகிவிட்டாள் நடப்பது இதுவே அதனால்தான் ஆண்கள் கல்யாணம் ஆனபின்பும் காதலியை தேடிக் கொண்டிருக்கின்றனறோ?

டிஸ்கி: கிழே உள்ளது நெட்டில் யாரோ ஸ்மார்ட்  ஆள் சொன்னது நமக்கு எல்லாம் அந்த அளவு ஸ்மார்ட்நெஸ் கிடையாதுங்கோ!!!
Having "WIFE" Is A
Part Of Living...
But
Having "GIRLFRIEND"
Along With The "WIFE" Is
Art Of Living

அடிக்கடி நெட்டில் கவிதைகள் அதிகம் படிப்பதினால் ஏற்பட்ட விளைவுதான் இந்த பதிவிற்கு காரணம் மற்றபடி ஒன்றும் இல்லைங்கோ

16 comments:

  1. காதலியை காதலியாகவே பாருங்கள் கடைசி வரை குறை தெரியாது நிறைவே தெரியும் அருமை

    ReplyDelete
  2. Wife is part of living ....ok.

    GF is art of living .... double ok.

    life start of headaching ! ok ???

    'track ' மாற வேண்டாம் MTG !
    அதாவது , தகவல் உங்களுக்கு நல்லா வருதுனு சொன்னேன்.
    மற்றபடி, ' pass ' தான் . எங்கே சுட்டது ?

    ReplyDelete
  3. @சசிகலா உங்கள் கருத்துக்கு நன்றி காதலியை நாங்கள் கடைசிவரை காதலித்து கொண்டுதான் இருக்கிறோம் ஆனால் மனைவிதான் கடைசிவரை காதலியாக இருக்காமல் மனைவியாக இருக்கவிரும்புகிறார்கள்

    ReplyDelete
  4. @ஸ்வராணி உங்களின் குறும்பான கருத்துக்கு நன்றி, ரமணி சார் மற்ரும் உங்களின் கவிதைகளை படித்ததால் எழுந்த ஆர்வத்தின் விளைவே மேலே கவிதை என்ற பெயரில் நான் எழுதிய கிறுக்கல்கள். அவையாவும் நான் சொந்தமாக எழுதியதுதான். அந்த கவிதையின் கிழே ஆங்கிலத்தில் நான் கொடுத்திருப்பது மட்டும்தான் நான் நெட்டில் சுட்டது. சிறந்த கவிஞராகிய நீங்கள் என்னை Pass-க்கியதில் எனக்கு மிக சந்தோஷம். ஆத்தா நான் பாஸாகிட்டேன் என்று கத்த ஆசை ஆனல் இப்போது இரவு நேரம் 1.40 ஆகிவிட்டதால் கத்த முடியாமல் மனதுக்குள் கத்தி கொண்டு இருக்கிறேன். நன்றி

    ReplyDelete
  5. அருமை நண்பரே!

    ReplyDelete
  6. ஹாஹா ரொம்பவே தைரியம் வேண்டும் இப்படி வரிகள் அமைக்கப்பா.. :)

    அருமை....கவலை வேண்டாம்பா..

    நல்ல மனைவியே அமைவார் உங்களுக்கு...கொசுவாக உங்களை உபத்திரப்படுத்தாமல் அன்பாய் அனுசரித்துக்கொள்ளும்படியாகவே வாழ்க்கைத்துணை அமைவார்..

    அருமையான கவிதை வரிகள்... அன்பு வாழ்த்துகள் சகோ...

    ReplyDelete
  7. மனைவியாக மாறிய போது
    என்னை எமன் என்று சொல்லுகிறாள்//

    ஹா ஹா ஹா ஹா நல்ல அனுபவமா இருக்கே......[[நான் உங்களை சொன்னேன்]]

    ReplyDelete
  8. //காதலியாக இருந்த போது
    என்னை பட்டாம் பூச்சிபோல
    சுற்றி வந்தவள்
    மனைவியாக மாறிய போது
    கொசுவைப் போல
    என்னை சுற்றி வருகிறாள்//

    ;))))))

    [அவர்கள் உண்மைகள்
    பேசுவதால் அவர்களை
    எனக்குப்பிடித்துள்ளது vgk]

    ReplyDelete
  9. மிக மிக அருமையாக உள்ளது
    "மீண்டும் மனைவியைக் காதலியாக்கும் முயற்சி
    என் வாழ்வை சுவாரஸ்யமாக்கிக் கொண்டிருக்கிறது "
    எனச் சொல்லி நல்ல விதமாக முடித்திருக்கலாமோ ?
    மனம் கவர்ந்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. @தனசேகரன் நன்றி நண்பரே

    ReplyDelete
  11. @மஞ்சுபாஷினி நீண்ட நாட்களுக்கும் பிறகு வரும் தோழியே உங்கள் வருகைக்கு நன்றி. இங்கே நான் எழுதி இருப்பது என் மனைவியை பற்றி அல்ல பொதுவாக எழுதியுள்ளேன் கவிதை போல ஏதாவது எழுத வேண்டும் என்ற் முயற்சியின் விளைவே இந்த பதிவு கவிதை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது காதலி அதன் பின் வருவது மனைவி. அதனால்தான் காதலி&மனைவி பற்றி எழுதினேன் வேறு ஏதாவது எழுதி மற்றவர்கள் சண்டைக்கு வருவதைவிட மனைவியை பற்றீ எழுதினால் என் மனைவி மட்டும்தான் எங்கூட சண்டைக்கு வருவாள் அப்படி வந்தால் கட்டிப்பிடித்து அணைத்து விட்டாள் எல்லாம் மறைந்து போகும்.

    ReplyDelete
  12. @மனோ எமன் தான் பாசக்கயிறை வீசுவான் அதனால் என் மனைவி நீங்க என் மேல் பாசமாக இல்லை என்று குற்றம் சொல்லும் போதும்மட்டும் நான் எமனாக மாறுவேன் மற்றபடி நான் ரொம்ப சாதுதானுங்க

    ReplyDelete
  13. @வை.கோ சார் என்மனைவி என் ரத்ததின் ரத்தமாக மாறவே கொசுவாக அவதரிக்கிறாள்

    ReplyDelete
  14. @ரமணி சார் நீங்கள் சொன்ன முடிவு நன்றாக இருக்கிறது. உங்கள் கருத்தை வரவேற்கிறேன். இளமையிலும் முதுமையிலும்தான் காதலி தேவைப்படுகிறது இடைப்பட்ட காலங்களில் மனைவிதான் தேவைபடுகிறது. வாழ்க்கை எப்போதும் அமைதியாக இருந்துவிட்டால் போரடித்துவிடும் அதில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் இருப்பதால்தான் வாழ்க்கை மிக சுவராஸ்யமாக போய் கொண்டிருக்கிறது. நான் முதுமையை அடையும் போதுதான் மனைவியை காதலியாக்கும் முயற்சி தொடங்கும். நான் இன்னும் முதுமை நிலமையை அடையவில்லை .

    ReplyDelete
  15. LIFE IS A JUNGLE WHEN U ARE SINGLE

    LIFE IS TROUBLE WHEN U ARE DOUBLE

    WHAT IS A LIFE WITH OUT A WIFE

    WIFE IS A KNIFE WHICH CUTS ON YOUR LIFE

    ARJUNA

    ReplyDelete
  16. கவிதை எழுதும் நோக்கில் யாரையோ போட்டுதாக்கின மாதிரி இருக்குது நண்பரே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.