Friday, May 6, 2011

காதலர்களுக்கு ஒரு  SMS  எச்சரிக்கை......

எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வேணுமாடா என்று பாடி காதலித்து கொண்டிருப்பவர்கள் நேரம் காலம் தெரியாமல் SMS மெஸேஜ் அனுப்பி கொண்டிருப்பார்கள். அவர்களுக்காக கிழேயுள்ள படம்.

மக்காஸ் இதைப் பார்த்த பின்பாவது நேரம் காலம் பார்த்து செய்தி அனுப்பவும்

காதலிக்கும் பெண்கள் அனுப்பும் SMS வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கும் அர்த்தங்கள்!

ஐ லவ் யூடா - உனக்கு ஆப்பு கன்ஃபார்ம்டா!
ஐ மிஸ் யூடா - உன்னை தொலைச்சு கட்டப் போறேன்டா!
யூ ஆர் மை லைஃப்டா - உன் உயிர் என் கைலடா!
டேய், யூ ஆர் மைய் செல்லமடா - டேய் நீ என் வீட்டுக்கு நாய்டா!
டேய், ஐ வான்ட் டூ மேரி யூ டா - டேய் உனக்கு மரண தண்டனை!!!

மச்சான் உனக்கு லவ்வு ஸ்டார்ட் ஆகுதுன்னா ஏழரை ஸ்டார்ட் ஆகுதுன்னு அர்த்தம்!!!

டார்லிங் என்னை மன்னிச்சிடும்மா ! என்னை மறந்துடும்மா! எனக்கு வேற ஒரு பெண்ணோட கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு..!

எனக்குத் தெரியும் ...!  

எப்படி ????

இனிமே நம்ம காதலுக்கு எங்க அண்ணன் தடையா இருக்கமாட்டாங்கன்னு   உங்க        
தம்பி ஏற்கனவே சொல்லிட்டார்..!

 
அப்படி        போடு அருவாளை....
 
காதலி              
:- நம்ம காதலுக்கு வீட்டுல சம்மதம் சொன்னா கல்யாணம் பண்ணிக்கலாம், இல்லாட்டி தற்கொலை பண்ணிக்கலாம்..
காதலன்:- ரெண்டும் ஒண்ணு தானே..
காதலி:- ??????
இப்படி எல்லாம் யோசிகிறாங்கப்பா
காதலிக்கும் போது ரதியே ரதியே என்று அழைத்து புலம்பிய காதலன்.
கல்யாணத்திற்கு அப்புறம் விதியே விதியே என்று புலம்பும் கணவானாகி போவான்.
என்ன இதுக்கு பயந்து அம்மாவிடம் சொல்லி பொண்ணு பார்க்க போறிங்களா.. போறதுக்கு முன்னாடி இதை படிச்சுட்டு போங்க மக்காஸ்

பொண்ணு பார்க்க போன இடத்தில் பொண்ணுக்கு என்ன என்ன போடுவிங்க என்று கேட்டது தப்பா போயிடுச்சு.
ஏன் என்ன ஆச்சு?
காலையிலே 10 இட்லி, மத்தியானம் குழம்பு காய்கறிகளோட 500 கிராம் சாதம். சாய்ந்திரம் நொருக்கு தீனியாக 200 கிராம் அல்வா + பக்கோடவும் இரவில் நல்ல முழுஸ் சாப்பாடும் தினசரி பொண்ணுக்கு போட்டு வருகிறோம் என்று சொல்லுறாங்கப்பா...
பாத்திங்களா.. பாத்திங்களா இப்பவே எப்படி நக்கலாக பேசுறாங்கண்ணு


5 comments:

  1. ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

    ReplyDelete
  2. இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிக்கணுமாக்கும்?எல்லாம் ஒரு அனுபவந்தேய்ன்!!!!

    ReplyDelete
  3. என்னதான் செய்வதாம் இப்படி முடிவு சொல்லாமல் முடித்தால் குழம்பி போகமாட்டர்களா.(என் பசங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

    ReplyDelete
  4. அப்படி போடு அருவாளை....

    ReplyDelete
  5. பெரியவர்கள் அறிவுரையை
    சிறுசுகள் பாணியில் சொல்லியிருக்கிறீர்கள்
    நல்ல பதிவு
    எனக்குக் கூட இது விஷயமாக ஒரு ஜோக் தெரியும்

    கடற்கரையில் காதலன் மடியில் படுத்தபடி
    இப்படிச் சொல்கிறாள்
    "நான் கட்டிக்கிட்டா உங்களைத்தான் கட்டிக்குவேன்"
    காதலன் பூரித்துப் போகிறான்
    அதே ஆர்வத்தில் தொடர்ந்து கேட்கிறான
    :"அப்படி ஒருவேளை ஏதோ ஒரு காரணத்தில்
    என்னை கட்டிக்கொள்ள முடியாது போனால்..?
    காதலி அவனை அணைத்தபடி சொல்கிறாள்
    :"வேறு யாரையாவது கட்டிக்குவேன்"
    தொடர வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.