Wednesday, March 9, 2011

பயனுள்ள தகவல்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்களேன்..




என் பதிவுகளை படித்து வரும் என் நண்பர் அவருக்கு வந்த மெயிலை எனக்கு அனுப்பியள்ளார் இதில் பல பயனுள்ள தகவல்கள் உள்ளன. அதை உங்ககளிடம் நான் பகிர்ந்து அளிக்கிறேன்.





நாம் படித்து பயனடைவது மட்டும் அல்லாமல் நம்மால் முடிந்த அளவு இச்செய்தியினை மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டால் மற்றவர்களும் பயன்பெற ஏதுவாயி இருக்குமென நம்புகின்றேன்.



1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.




2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://avargal-unmaigal.blogspot.com/2011/02/blog-post_05.html பார்க்கவும்.





3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.





4) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.







5) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். வரும் மார்ச் மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.



6) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.



7) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!



அதனால் நம்மால் முடிந்த வரை



**மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம்

**நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்

**ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.


8) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!


9) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/


10) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471






11) இரத்தப் புற்று நோய்:

"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.


மேலும் விபரங்களுக்கு

வகை : புற்றுநோய்
முகவரி:
East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

12) விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.


இது போல உங்களுக்கு மேலும் தெரிந்த பயனுள்ள தகவல்களை பின்னுட்டமாக இடுமாறு அழைக்கிறேன்

12 comments:

  1. இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது. //

    நல்ல விஷயம்..

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு
    தங்கள் இதற்காக எடுத்துக்கொண்ட
    முயற்சிகளுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இதுபோல நிறைய மெயில்கள் உலவுகின்றன. ஆனால் எந்தளவுக்கு அதில் சொல்லப்படும் விஷயங்கள் உண்மையென்று உறுதி செய்யமுடியவில்லை. உதாரணமாக, அடையார் மருத்துவமனை இலவசமாக மருந்து அளிப்பதாக ஒரு மெயில் வந்தது. அதுகழித்து, சில நாட்களில் இன்னொரு மெயில் வந்தது. அதிலே, ஒருவர் அச்செய்தியை உற்திசெய்ய அடையார் மருத்துவமனையை தொடர்புகொண்டபோது அச்செய்தி தவறு என்று மறுத்தார்களாம். இந்த மெயிலையும் என்னால் உறுதி செய்யமுடியவில்லை.

    ஆகையால், இதுபோன்ற மெயில்களில் குறிப்பிடப்பட்ட வலைத்தளங்கள், ஃபோன் நம்பர்கள் ஆகியவற்றை முழுமையாக நம்பியிருக்காமல் இருப்பதே நல்லத என்பது என் கருத்து.

    ReplyDelete
  4. எனினும், அனைவருக்கும் பயந்தர வேண்டுமென்ற உங்கள் நல்லெண்ணம் மிகவும் பாராட்டுற்குரியது.

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ள பதிவு, தெரிந்தவரக்ளுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

    ReplyDelete
  6. தகவல்களும் உம்முடைய சமுதாய பொறுப்புணர்வும் அருமை தோழரே !!! மேலும் பலருக்கு இப்பதிவு சென்றடைவது அவசியமாகும் .........

    ReplyDelete
  7. ////இதுபோல நிறைய மெயில்கள் உலவுகின்றன. ஆனால் எந்தளவுக்கு அதில் சொல்லப்படும் விஷயங்கள் உண்மையென்று உறுதி செய்யமுடியவில்லை. உதாரணமாக, அடையார் மருத்துவமனை இலவசமாக மருந்து அளிப்பதாக ஒரு மெயில் வந்தது. அதுகழித்து, சில நாட்களில் இன்னொரு மெயில் வந்தது. அதிலே, ஒருவர் அச்செய்தியை உற்திசெய்ய அடையார் மருத்துவமனையை தொடர்புகொண்டபோது அச்செய்தி தவறு என்று மறுத்தார்களாம். ////

    ஹசைனம்மா எல்லா செய்திகளையும் அயல் நாட்டில் இருந்து என்னால் உறுதி செய்துவிட்டு போடமுடியாது. ஆனாலும் எதிர்காலத்தில் அதற்கும் முயற்சி செய்கின்றேன். கேன்சரால் பாதிக்கப்பட்ட்வர்கள் அந்த ஹாஸ்பிட்டலை ஒரு முறை போன் செய்து உறுதி செய்து கொள்வவது நல்லது அவர்கள் இலவசமாக் செய்தால் நமக்கு நல்லது இல்லையென்று சொன்னால் நாம் இழக்க போவது ஒரு போன் கால் மட்டுமே அந்த போங்காலுக்கும் அதிக செலவாகது என நினைக்கின்றேன்.

    ReplyDelete
  8. இங்கு வந்து படித்த மற்றும் கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. நான் படித்த பயனுள்ள தகவல்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளீத்து மற்றவர்களும் பயன் அடையவேண்டும் என்பது தான் எனது ஆசை. அதில் தவறுகள் ஏது இருந்தால் அதை சூட்டி காட்டுமாறு உங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  9. இங்கு வந்து படித்த மற்றும் கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. நான் படித்த பயனுள்ள தகவல்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளீத்து மற்றவர்களும் பயன் அடையவேண்டும் என்பது தான் எனது ஆசை. அதில் தவறுகள் ஏது இருந்தால் அதை சூட்டி காட்டுமாறு உங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  10. கொடுத்த செய்திகள் எல்லாத்தையும் நீங்க உறுதிபடுத்திட்டு போடுவது கஷ்டம் தான்....ஆனாலும் உங்கள் சமூக நல உதவி மனப்பான்மைக்கு கிரேட் அப்ளாஸ் சார்...

    ReplyDelete
  11. More informative....thx...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.