Tuesday, November 9, 2010


கோவையில் இரண்டு குழந்தைகளை கடத்தி கொன்ற கால் டாக்ஸி டிரைவர் மோகன்ராஜ் காவல் துறையினரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டுள்ளான் ! காவல் துறையினரை, அவர்களது துப்பாக்கியை பிடுங்கி, சுட முயற்சித்ததால் சுட்டுகொன்றனர்' என வழக்கம்போல் அரசு மருத்துவமனையில் கட்டுப்போட்டு படுத்திருந்து போஸ் கொடுத்தாலும் , உண்மை என்னவென்று பாமரமக்களுக்கும் உணர முடிகிறது!



இவர்களை கோர்டுக்கு கொண்டு வந்த போது பொது மக்கள் திரண்டு இவர்களையெல்லாம் உடனே கொல்ல வேண்டும்! என்று கோபக்குரல் எழுப்பியதன் எதிரொலிதான் இது! இவர்களை போன்ற பச்சிளம் குழந்தைகளிடம் பாலியல் கொடுமை செய்யும் ஈவிரக்கமற்ற அரக்கர்களை விசாரணை என்ற பெயரில் காலத்தையும் , பாதுகாப்பு என்ற பெயரில் காவல்துறையினரின் சக்தியையும் , சிறை என்ற பெயரில் மக்கள் பணத்தில் சோறு போடுவதையும் விட மூன்று தோட்டாக்களில் வேலையை முடிப்பதுதான் சிறந்தது!



இப்போது அந்தகுழந்தைகளின் பெற்றோர் மன நிம்மதி அடைவர்! மக்களும் திருப்தி அடைவர்! இனி இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் பயப்படுவார்கள்! குற்றங்கள் குறைய வேண்டுமானால் இது போன்று தண்டனைகள் கடுமையாக்கப் பட வேண்டும்!



இதுபோன்ற குற்றங்களுக்கு காவல்துறையின் இதுபோன்ற தீர்ப்புகளே சரியானது! இந்த மிருகங்களை.. கோர்டுக்கு கொண்டுபோய்...10 வருஷம் விசாரணை நடந்து.. ஒரு நீதிபதி மரண தண்டனை தருவாரு...இவனும்...மேல் கோர்ட்ல அப்பில் ..பண்ணுவன்... இன்னொரு நீதிபதி வந்து...ஆயுள் தண்டனையா .. மாற்றுவர்.. அடுத்த அப்பில்'ல ..மற்றொரு.. நீதிபதி ....தண்டனை ஆண்டுகளை .. குறைப்பார் . ..ஆனால் விசாரணை காலகட்டதுலேயே... தண்டனையை அனுபவித்ததாக கூறி .... விடுதலை பண்ணி .. மீண்டும்.. ஒருமுறை நீதிதுறையை.. காமடி ஆக்குற கொடுமை நடக்காமல்...... காவல்துறையின் இந்த அதிரடி தீர்ப்பே.. சரியானது...அதுவே மக்களின் விருப்பமும்...கூட. ! தொடரட்டும் காவல்துறையின் ..வேகம்........ கங்கையில் குளித்தால் தான் செய்த பாவங்கள் எல்லாம் கரைந்து போகும் என நம்புபவர்கள் நாம். நான் அது போல போலிஸார் செய்த தவறுகள் எல்லாம் இந்த தீர்ப்பால் கரைந்து போய்விட்டது என்று நம்புகிறேன்.நாட்டை காப்பது இராணுவம் நம் தமிழ் நாட்டை காக்க இராணுவம் தேவையில்லை நமது போலிஸாரே போதும்.



இது போன்ற தீர்ப்புகள் தினசரி எழுதப்பட வேண்டும்.தவறு செய்தவர்கள் உடனடியாக தண்டிக்க பட வேண்டும்.

போலிஸோ அல்லது அரசியல்வாதிகளோ இது மாதிரி என்ன தவறுகள் செய்தாலும் பொதுமக்கள் திரண்டு வந்து தவறு செய்பவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.அப்படி செய்யவில்லை என்றால் இது ஒரு தமிழகத்தின் எமோஷனல் நாடகமாகவே கருதப்படும்.



"இதை படித்த என் மனதுக்குள் எழுந்த ஆசை. தமிழக போலிஸார் போல தமிழக மக்களும் முழித்து எழுந்து வரும் தேர்தலில் இந்த பாழாய் போன அரசியல் வாதிகளுக்கும் என்கவுண்டர் முறையில் ஒட்டுப்(சுட்டு போட்டு அல்ல)போட்டு தமிழக அரசியலில் இருந்து தூக்கி எறிய வேண்டும். அப்படி இந்த தமிழக மக்கள் செய்தால் தமிழகம் மீண்டும் தலை நிமிர்ந்து நிக்கும்."

2 comments:

  1. //இதை படித்த என் மனதுக்குள் எழுந்த ஆசை. தமிழக போலிஸார் போல தமிழக மக்களும் முழித்து எழுந்து வரும் தேர்தலில் இந்த பாழாய் போன அரசியல் வாதிகளுக்கும் என்கவுண்டர் முறையில் ஒட்டுப்(சுட்டு போட்டு அல்ல)போட்டு தமிழக அரசியலில் இருந்து தூக்கி எறிய வேண்டும். அப்படி இந்த தமிழக மக்கள் செய்தால் தமிழகம் மீண்டும் தலை நிமிர்ந்து நிக்கும்.// இதை படித்த என் மனதுக்குள் எழுந்த ஆசை. தமிழக போலிஸார் போல தமிழக மக்களும் முழித்து எழுந்து வரும் தேர்தலில் இந்த பாழாய் போன அரசியல் வாதிகளுக்கும் என்கவுண்டர் முறையில் ஒட்டுப்(சுட்டு போட்டு அல்ல)போட்டு தமிழக அரசியலில் இருந்து தூக்கி எறிய வேண்டும். அப்படி இந்த தமிழக மக்கள் செய்தால் தமிழகம் மீண்டும் தலை நிமிர்ந்து நிக்கும்.//

    இது ஆசை இல்லை..பேராசை...கனவில் யோசிச்சு பார்த்துக்கோங்க..இப்படி ப்ளாக் கில் பதிவாய் போட்டுகோங்க..அதுக்கு பிறகு யோசிக்க படாது...:))

    ReplyDelete
  2. ஆனந்தி.. said...

    //இதை படித்த என் மனதுக்குள் எழுந்த ஆசை. தமிழக போலிஸார் போல தமிழக மக்களும் முழித்து எழுந்து வரும் தேர்தலில் இந்த பாழாய் போன அரசியல் வாதிகளுக்கும் என்கவுண்டர் முறையில் ஒட்டுப்(சுட்டு போட்டு அல்ல)போட்டு தமிழக அரசியலில் இருந்து தூக்கி எறிய வேண்டும். அப்படி இந்த தமிழக மக்கள் செய்தால் தமிழகம் மீண்டும் தலை நிமிர்ந்து நிக்கும்.// இதை படித்த என் மனதுக்குள் எழுந்த ஆசை. தமிழக போலிஸார் போல தமிழக மக்களும் முழித்து எழுந்து வரும் தேர்தலில் இந்த பாழாய் போன அரசியல் வாதிகளுக்கும் என்கவுண்டர் முறையில் ஒட்டுப்(சுட்டு போட்டு அல்ல)போட்டு தமிழக அரசியலில் இருந்து தூக்கி எறிய வேண்டும். அப்படி இந்த தமிழக மக்கள் செய்தால் தமிழகம் மீண்டும் தலை நிமிர்ந்து நிக்கும்.//

    இது ஆசை இல்லை..பேராசை...கனவில் யோசிச்சு பார்த்துக்கோங்க..இப்படி ப்ளாக் கில் பதிவாய் போட்டுகோங்க..அதுக்கு பிறகு யோசிக்க படாது...:))



    ஆம். அதுதான்.உண்மை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.