Tuesday, October 26, 2010

ஒரு மனிதன் ஊட்டியில் கார் ஓட்டி சென்று கொண்டிருக்கும் போது அவனுக்கு பின்னால் இருந்து ஒரு குரல் ஓசை வந்தது,



காரை உடனே நிறுத்து ஒர் அடி அதிகம் ஒட்டினால் ஒரு பெரிய பாறங்கள் உன் காரின் மீது விழுந்து நீ இறந்து போவாய் என்று கூறியது. உடனே அவனும் காரை நிறுத்தினான். ஒரு பெரிய பாறாங்கள் அவன் காரின் முன் விழுந்தது. அவனும் உயிர் தப்பினான்,


பின் அந்த மனிதன் அதிசியப்பட்டு நன்றி கூறி மீண்டும் கார் ஓட்டினான்.


சிறிது தூரம் சென்ற பின் மீண்டும் அதே குரல் சொன்னது. காரை நிறுத்து இல்லையென்றால் ஒரு பெரிய லாரி வந்து உன் காரில் மோதி நீ இறந்து விடுவாய் என்றது. உடனே அவன் காரை நிறுத்தினான்.



அந்த நேரத்தில் அவன் பின் வந்த கார் அவனை ஒவர் டேக் செய்து முன்னால் சென்ற போது ஒரு லாரிவந்து மோதி அந்த கார் பள்ளத்தில் விழுந்தது.


அவன் மிகவும் அதிசியப்பட்டு யார் நீ என்று குரல் வந்த திசைய நோக்கி கேட்டான்.


அதற்கு அந்த குரல் நான் உன்னை காக்கும் தேவதை ( guardian angel ) என்றது.


அதற்கு அந்த மனிதன் வெகு ஏளனமாக அந்த தேவதையை நோக்கி ( Hell ) ஹெல் நீ எனை காக்கும் தேவதை என்றால் என் கல்யாணத்தின் போது நீ எங்கே போயிருந்தாய் என்று கேட்டான்.

அன்று முதல் அந்த தேவதையை காணமல் இன்னும் அவன் தேடிக் கொண்டிருக்கிறான்.


நீங்கள் பார்த்தால் எனக்கு பதில் போடவும். ( அந்த மனிதன் நானில்லையப்பா !!! நல்ல வேளை நான் என் மனைவியிடம் இருந்து தப்பித்து கொண்டேன். ஹீ....ஹீ ஹி .......ஹீ

3 comments:

  1. naanum paakkala!!!!!!!!

    ReplyDelete
  2. திருமண நாளன்று அந்த தேவதைதான் மணப்பெண்ணாக வந்தாள். அன்று முதல் அந்த தேவதை அவரவர் மனைவியாக உடனிருக்கிறாள். பலருக்குத்தான் இது புரிவதே இல்லை! :-))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.