Thursday, September 23, 2010

நீண்ட கார் பயணத்திற்குப் பின் நாங்கள் வீட்டிற்கு வந்து ட்டிரிங்ஸ் அடிக்கும் போது என் நண்பரின் மனைவி எங்களுக்காக ப்ரைடு எக் சமையலறையில் தாயாரித்துக் கொண்டிருந்தார்.


tamil humour
அப்போது என் நண்பர் திடீர் என சமையலறையில் நுழைந்து ஏய்ய்ய்ய் ஜாக்கிரதை! ஜாக்கிரதை! ஏய்ய்ய் இன்னும் கொஞ்சம் பட்டர் போடுடி! ஏய்ய்ய்ய் என்ன பண்னுர ஒரே சமயத்தில் மூன்று . நாலு எக் போடதடி.. ஏய்ய்ய்ய் தீயைப் பாருடி.. சிறிது தீயைக் குறைடி ...கருகிறபோதுடி... பார்த்துடி... பார்த்து...பட்டர் போதுமாடி... இந்த நேரத்தில் எங்கடி போய் பட்டர் தேடுறதுடி......ஏய்ய்ய்ய் சட்டியில் ஒட்ட போதுடி,, நீ எங்க பார்த்து பண்ணுறடி.... பார்த்துப் பார்த்து ஜாக்கிரதை... ஓ மை காட்!!!!!!!!!நான் எத்தனை தடவை சொன்னாலும் நீ சமைக்கும் போது எப்போதும் காதில் வாங்கிறதுயில்லை.. ஆர் யூ க்ரேஸி? ஹவ் யூ லாஸ்ட் யுவர் மைண்ட்? ஓகே ஒகே!!!!!! உப்பு போட மறந்திடாத........நீ எப்பவுமே உப்பு போட மறந்துடுவ...ஏய்ய் பார்த்து போடுடி....பார்த்து..பார்த்து...........

husband wife tamil humour
 


அவரது மனைவி அவரைத் திரும்பிப் பார்த்து உங்களுக்கு என்ன ஆச்சு? ஏதாவது பைத்தியம் கியித்தியம் பிடிச்சிருச்சா? ஒரு சாதாரணமான எக்கை எப்படி பொறிப்பதென்று பெண்ணாகிய எனக்குத் தெரியாதா? எவ்வளவு நாளா சமைச்சிக்கிட்டு இருக்கிறன். போங்க. பேசம போய் உங்க வேலையை பாருங்க என்றார்.



while driving
அதற்கு அவள் கணவன் மிகவும் அமைதியாகப் பதில் சொன்னார். கண்ணம்மா நான் கார் ஓட்டும் போது, நீ எனக்கு இன்ஸ்ரக்ட்ஷென் கொடுக்கும் போது, நான் எப்படி பீல் பண்ணுவேன் என்பதை உனக்கு உணர்த்த வேண்டுமென்றுதான் நான் சமையலறைக்குள் வந்து இப்படிச் சொன்னேன். இப்போதாவது உனக்கு புரிந்து இருக்குமென்று நினைக்கின்றேன் என்


அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.