Wednesday, July 21, 2010

ஆனந்தம் be happy

நாம் குழந்தையாக இருக்கும்போது, நாம் பெரியவனாக வளர்ந்துவிட்டால் வாழ்க்கை ரொம்பச் சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். பெரியவனாகிவிட்டால், வேலைக்கிடைத்துவிட்டால் நம் வாழ்க்கை ரொம்பச் சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். வேலைக்கிடைத்துவிட்ட பிறகு நல்ல மனைவி கிடைத்தால் ,நம் வாழ்க்கை ரொம்பச் சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். நல்ல மனைவி கிடைத்த பிறகு குழந்தையிருந்தால், நம் வாழ்க்கை ரொம்பச் சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். குழந்தை பிறந்த சிறிதுகாலத்திற்குப் பிறகு அந்தக் குழந்தை வளர்ந்துவிட்ட பிறகு வாழ்க்கை ரொம்பச் சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். அதன் பிறகு அந்தக் குழந்தை டீன் ஏஜ் பருவத்தைத் தாண்டிவிட்டால் கவலையில்லாமல் வாழ்க்கை ரொம்பச் சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். அந்தக் குழந்தைக்கும் கல்யாணமாகி நாமும் ரிட்டையர்டுயாகி நாம் பேரக்குழந்தைகளுடன் விளையாடும் போது வாழ்க்கை ரொம்பச் சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம்.



ஆனால் வாழ்வின் உண்மையென்னவென்றால் இந்த நிமிஷத்தைவிட வாழ்வில் வரப்போகும் நிமிஷம் சந்தோஷமாக இருக்கும் என்று சொல்லமுடியாது. இப்போதுயில்லையென்றால் பின் எப்போது?


 

நம் வாழ்வில் எப்போழுதும் சாவல்கள் நிறைந்துள்ளன. நாம் அதைப் புரிந்து ஒத்துக்கொண்டு சந்தோஷமாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.வாழ்க்கை இப்போதுதான் சந்தோஷமாக ஆரம்பிக்கிறது என்று நாம் நினைக்கும் போது உடனே தடைக்கல் எதிர்ப்படும். அந்தத் தடைக்கல்லையும் ஒரு படிக்கல்லாக மாற்றி வெல்ல வேண்டும். நிமிஷங்கள் தங்கப்புதையல் மாதிரி . அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை நம் வாழ்வில் யாரை முக்கியமாகக் கருதுகின்றோமோ அவர்களுடன் பகிர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும். நிமிடம் யாருக்காகவும் காத்திருக்காது அதைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.



படித்து முடிக்கும்வரை , உடல் எடையைக் குறைக்கும்வரை, அல்லது கூட்டும் வரை, வேலைக் கிடைக்கும்வரை, கல்யாணம்மாகுவரை, பிள்ளை பெற்கும்வரை, கார் வாங்கும்வரை, வீடு வாங்கும்வரை, இல்லை விஜயகாந் தமிழகத்தின் முதலமைச்சராகும் வரை, அம்மா ஜெ பிரதமராகும்வரை,கலைஞ்யர் வெள்ளை மாளிகையை விலைக்கு வாங்கும் வரை, ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும்வரை, ராமதாஸ் தனித்துத் தேர்தலில் நிற்கும்வரை ,விஜய் படம் பத்து நாள் சூப்பர் கிட்டாக ஓடும்வரைக்கும் காத்திருப்பதை இப்போதே நிறுத்தி ! இந்த நிமிஷத்தைவிட வேற எந்த நிமிஷமும் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது என்று நினைத்து வாழுங்கள்.



சந்தோஷம் என்பது ஒரு பயணம். அதற்கு ஒரு முடிவு என்பது கிடையாது. எனவே யாரும் பார்க்காத போது எப்படி ஆடி பாடுவீர்களோ அப்படி ஆடிப்பாடி சந்தோஷமாக இருங்கள்.



டிஸ்கி: : நான் தமிழில் எழுதி 12 வருடங்களுக்கு மேலாகிறது. எனவே எனது எழுத்தில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். வலைப்பக்கத்தை ஆரம்பத்து விட்டதால் எதையாவது எழுத வேண்டுமென்று எழுதுகின்றேன். இது எனது புதிய பொழுது போக்கு.......பிடித்து இருந்தால் பதில் எழுதுங்கள்..

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.